search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்றுகை போராட்டம்"

    • கடந்த மாதம் 22-ந்தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
    • மீனவர்கள் எந்திரங்களை எடுத்து செல்லவிடாமல் சிறைபிடித்து முற்றுகையிட்டனர்

    கன்னியாகுமரி :

    கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் கடற்கரை கிராமத்தில் நேர்கல்லுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணி 14-3-2022 அன்று தொடங்கி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் தொடர்ந்து 5 மாதங்களாக பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கடந்த மாதம் 22-ந்தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை கடலரிப்பு தடுப்பு கோட்ட அதிகாரிகள் மேல்மிடாலம் ஊர் நிர்வாகிகள் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையில் மே மாத இறுதிக்குள் பணிகள் நிறைவு செய்து விடுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட் டது. அதன் பின்னரும் பணிகள் சீராக நடைபெறவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அக்கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எந்திரங்களை எடுத்து செல்ல கண்டெய்னர் லாரியை கொண்டு சென்று உள்ளனர். இதனை கடலோரத்தில் தூங்கிக்கொண்டிருந்த மீனவர்கள் பார்த்து உள்ளனர்.

    அவர்கள் ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தகவல் அறிந்து வந்த மீனவர்கள் எந்திரங்களை எடுத்து செல்லவிடாமல் சிறைபிடித்து முற்றுகையிட்டனர். இதனால் நள்ளிரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று பொதுப்ப ணித்துறை அதிகாரி ஒருவர் சென்று மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வேறு எந்திரங்கள் கொண்டு வந்து பணி தொடங்குவதாக கூறி உள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த மீனவர்கள் மீன் இறங்குதளம் பணி நிறைவடையாமல் வாகனங்களை விடுவிக்க மறுத்து உள்ளனர். இதனால் வந்த அதிகாரி திரும்பி சென்றுள்ளார். எந்திரங்கள் மற்றும் வாகனங்கள் அதே பகுதியில் நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளன.

    • தமிழ்நா ட்டில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களு க்கும் விடுமுறை வழங்க வேண்டும்,
    • 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஒன்றிய பகுதியிலுள்ள அங்கன்வாடி பணியாளர்கள், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவல கத்தை முற்றுகையிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜானகி தலைமை தாங்கினார். வத்தலகுண்டு வட்டாரத் தலைவர் நிறைமதி, வட்டாரச் செயலாளர் சக்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் பிரபாகரன், ஒன்றிய அமைப்பாளர் வின்சென்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    தற்போது குழந்தை களுக்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் நலன் கருதியும்,குழந்தைகள் நல மைய பணியாளர்களின் நலன் கருதியும் கடும் கோடை வெயிலின் தாக்க த்திலிருந்து பாது காத்துக் கொள்ள பள்ளி,கல்லூரி களுக்கு கோடை விடுமுறை விடுவது போல் தமிழ்நா ட்டில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களு க்கும் விடுமுறை வழங்க வேண்டும்,

    10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை முழுமை யாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறு த்தி ஆர்ப்பாட்டம் நடைபெ ற்றது. ஆர்ப்பாட்ட த்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • சொத்து வரியை குறைக்க கோரி வருகிற 28-ந் தேதி முற்றுகை போராட்டம் நடக்கிறது
    • ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழுவின் கூட்டம் மாரியப்பன் தலைமையில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழுவின் கூட்டம் மாரியப்பன் தலைமையில் நடந்தது. இதில் தமிழக விவசாயிகள் சங்கம், அறம் அறக்கட்டளை, முகநூல் நண்பர்கள், தெரசா நற்பணி இயக்கம், தென்னை விவசாயிகள் சங்கம், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையம், நேதாஜி ரத்ததான கழகம், தமிழ்ச் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தமிழகத்திலேயே அதிகமாக வரிவிதித்துள்ள (சென்னை 12.40%, ராஜபாளையம் 20.80%) ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரியை குறைக்க வலியுறுத்தியும், தாமிரபரணி தண்ணீருக்கு 3 மடங்கு (மாதம் ரூ.50 என்பதை 150 ஆக) உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும், ராஜபாளையம் நகரில் 5 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகத்தை வருகிற 28-ந் தேதி முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    • செம்மினிபட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • கிராம சபை கூட்டத்தில் 5 முறை எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மினிபட்டி ஊராட்சியில் விளை நிலங்கள் உள்ள பகுதியில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் தொடங்குவதற்கு கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமாககிராம சபை கூட்டத்தில் 5 முறை எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தாசில்தார், கலெக்டர், ஆர்.டி.ஓ., வரை மனுக்கள் கொடுக்கப்பட்டு விசா ரணை நடந்தது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அட்டைப்பெட்டி கம்பெனி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும், நிலத்தடி நீர் பாதிக்காது என்பதாலும் தொடங்கிக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அட்டைப்பெட்டி கம்பெனியினர் இடத்தை சுத்தம் செய்ய தொடங்கினர். இது குறித்து வாடிப்பட்டி போலீசில் பொதுமக்கள் புகார் செய்தனர்.

    மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையின் முடிவு தங்களுக்கு இதுவரை வரவில்லை என்றும், மீண்டும் அட்டைப்பெட்டி கம்பெனி பணியை தொடங்குவதை கண்டித்து நேற்று பொதுமக்கள் ஒன்று திரண்டு செம்மி னிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மண்டல துணை தாசில்தார் தமிழ்எழிலன், வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன், வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்.டி.ஓ.வுக்கு மேல் முறையீடு செய்ய கேட்டுக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • துப்புரவு ஊழியர் லலிதா திடீரென்று நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
    • துப்புரவு ஊழியர்கள் சாலையில் விழுந்து கதறி அழுதனர்.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சி செயல்பட்டு வருகின்றது. இங்கு 50-க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சியில் பணிபுரிந்து வந்த துப்புரவு ஊழியர் லலிதா திடீரென்று நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இறந்த லலிதா குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி 40-க்கும் மேற்பட்ட துப்புரவு பெண் ஊழியர்கள் இன்று காலை கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சி அலுவலகத்திற்கு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த துப்புரவு ஊழியர்கள் சாலையில் விழுந்து கதறி அழுதனர்.

    மேலும் எங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பணி பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு ஏற்படுத்தி தர கோரி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஊராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றாததால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • பரமக்குடி வைகை ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.
    • இதனை கண்டித்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

    பரமக்குடி

    மதுரைக்கு அடுத்த படியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். பரமக்குடி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு ஜே.சி.பி. மூலம் லாரிகளில் மணல் திருடியுள்ளனர்.

    கிராமப்புறங்களில் நடந்த மணல் திருட்டு தற்போது நகர்புறங்களிலும் தொடங்கிவிட்டது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறி மறத்தமிழர் சேனை நிறுவனர் பிரபாகர் மற்றும் பா.ஜ.க.வினர் மணல் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஓட்டப்பா லத்தில் இருந்து தாலுகா அலுவலகம் வரை கோசமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் தாசில்தார் பார்த்தசாரதி, போலீசார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது கூடிய விரைவில் மணல் திருடியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • ஏராளமான நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கடந்த 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு கடந்த 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அதன் பின்பும் ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.வலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 65 பேர் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    முற்றுகை போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    • ஓய்வு கால பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    சி.ஐ.டி.யு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் இன்று நடந்தது.

    மாவட்ட செயலாளர் பரசுராமன், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினா்.

    ஒப்பந்த நிலுவைத் தொகை, கொரோனா நிதி வழங்க வேண்டும்.அடிப்படை சம்பளத்தை சரி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஒப்பந்த பலனை வழங்கி, ஓய்வூதிய உயர்வு, பணி ஓய்வு பெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களின் ஓய்வு கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாவட்ட தலைவர் இளங்கோ, துணை பொது செயலாளர் சுரேஷ், பொருளாளர் சிரஞ்சீவி, துணைத்தலைவர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முற்றுகை போராட்டத்தையொட்டி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்ற முயன்றனர். இதற்கு சீரகம்பட்டியைச் சேர்ந்த ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • சீரகம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு நில க்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலுக்கு வார்பட்டி ஊராட்சி சீரகம்பட்டி கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வரு கின்றனர். இக்கிராமத்தில் உள்ள குழந்தைகள் படிப்பத ற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடத்திற்குள் தற்போது மழை பெய்வதால் தண்ணீர் புகுந்து பள்ளி நடத்த முடியாத நிலை உள்ளது. மேலும் கட்டிடம் தற்போது பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதனை உடனடியாக அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிலக்கோட்டை ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க ப்பட்டது. இந்நிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் சென்று சீரகம் பட்டியில் அமைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்ற முயன்றனர். இதற்கு சீரகம்பட்டியைச் சேர்ந்த ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து சீரகம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு நில க்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உடனடியாக அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினர்.

    அவர்களிடம்நில க்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அண்ணாதுரை பேச்சு வார்த்தை நடத்தினார். உடனடியாக அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டனர்.

    • பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை காலத்தோடு செய்ய தவறிவிட்டது.
    • சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கும் பணியும் இதுவரை முழுமைபெறமால் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முன்னாள் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரி மாநிலத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அதேபோல், புதுச்சேரியை ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசு காரைக்காலை அனைத்து வகையிலும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறி ப்பாக சொல்லப்போ னால், மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை காலத்தோடு செய்ய தவறிவிட்டது. மாணவ ர்களுக்கான ஒரு ரூபாய் பஸ் வசதி முற்றிலும் கிடையாது.

    சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கும் பணியும் இதுவரை முழுமைபெறமால் உள்ளது. நகர் மற்றும் கிராமப்புற சாலைகள் போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. முதல் கட்டமாக, புதுச்சேரி அரசின் கல்வித்துறையின் அலட்சியப்போக்கை கண்டித்து, காரைக்காலில், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் தலைமையில் ஓரிரு நாளில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது, கல்வித்துறை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி, ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளுடன் இணைந்து முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

    • பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    ஆற்காடு:

    ஆற்காட்டை அடுத்த லாடவரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. விளைநிலங்களுக்கு அருகே இந்த கடை இருப்பதால் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை விலை நிலங்களில் வீசி செல்வதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

    மேலும் பெண்கள் அந்த வழியாக செல்லவும் அச்சப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருந்தனர்.

    ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் 12 மணி அளவில் கடையை திறக்க வந்த டாஸ்மாக் ஊழியர்களை கடை திறக்க விடாமல் தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர்.

    • கல்லூரியில் சரிவர பாடம் நடத்துவதில்லை.
    • ஞாயிற்று கிழமைகளில் நடைபெறும் ஜெப கூட்டத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்துகின்றனர்.

    சேலம்:

    சேலம் 5 ரோட்டில் தனியார் டிப்ளமோ நர்சிங் கல்லூரி செயல்பட்டு வந்தது. இங்கு படித்த திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த 7 மாணவிகள், கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தனர். அந்த புகாரில், கல்லூரியில் சரிவர பாடம் நடத்துவதில்லை. ஞாயிற்று கிழமைகளில் நடைபெறும் ஜெப கூட்டத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்துகின்றனர். தவறினால் ரூ.200 அபராதம் செலுத்த நெருக்கடி தருகின்றனர். எனவே இந்த கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லாததால் சான்றிதழ்களை பெற்று தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

    அதே நேரம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் கல்லூரி முன் நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மேற்கு தாசில்தார் தமிழரசி தலை மையில் ஆர். ஐ கோமதி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் அன்பழகன், ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கல்லூரி யில் விசாரணை நடத்தினார்.

    அப்போது எந்த ஆவண மும் இல்லாமலும் முறையாக அனுமதி பெறாமலும் அந்த கல்லூரி செயல்படுவது தெரிய வந்தது. இதையடுத்து கல்லூரியில் பயின்று வந்த 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் மீட்கப்பட்டனர். அதில் 18 வயதுக்கு உட்பட்ட 15 பேர், சைல்ட் லைன் அமைப்பில் தங்க வைக்கப்பட்டனர். இதர மாணவிகள் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பின்பு மாலையில் கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் கல்லூரி மீது சட்ட ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×